வாஷிங்டன்: சமூக இணையதளமான பேஸ்புக், பொழுதை போக்குவதற்கானது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி பல நன்மைகளை செய்து வருகிறது. ஆம், 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய், மகனை மீண்டும் இணைத்துள்ளது பேஸ்புக். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜோசப் வகுவெரா, லொரெனா பெரஸ் தம்பதி.
இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2006ம் ஆண்டில் மனைவியை விட்டு பிரிந்து விட்டார் ஜோசப். உடன் மனைவியின் அனுமதியின்றி மகன் இசையா ஜெரமையா வகுவெராவையும் அழைத்துச் சென்று விட்டார். எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தனது மகனை காணவில்லை என கணவர் மற்றும் மகன் போட்டோவுடன் பேஸ்புக்கில் பெரஸ் விளம்பரப்படுத்தி இருந்தார். இதைப் பார்த்த ஜோசப்பின் முன்னாள் காதலி, இசையா இருப்பிடம் குறித்து போலிசில் தகவல் கொடுத்தார்.
போலிசார் உதவியுடன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் இசையாவை பெரஸ் கண்டுபிடித்தார். மகனை சந்தித்தபோது ஆனந்த கண்ணீர் விட்டேன். அவன் என்னை கட்டித் தழுவி, அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என்றான் என பெரஸ் தெரிவித்தார்.தாயையும் மகனையும் சேர்த்து வைப்பதற்கு உதவிய ஹாரிஸ் பகுதி மாவட்ட வழக்கறிஞர், கூறுகையில், தம்பதிக்குள் ஏற்படும் பிரச்னையில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிரிக்கக்கூடாது என்றார்.
Wednesday, July 14, 2010
தாய், மகனை இணைத்தது பேஸ்புக் இணையதளம்
11:07 AM
thupparithal
RSS Feed
Twitter
1 comments:
facebook - க்கு ஒரு ஒ போடுங்க......
Post a Comment